வீடும் வீடல்ல
என் வீட்டில் எற்பட்ட
திடீர் வெறுமையினால்
கதிரவனையும் வர விடாமல்
குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும்
தடக் தடக் என்று
நேர வரையரையின்றி
தட்டி எழுப்பி
ஓங்கி ஒலித்த கால்களின்
ஓட்டமின்றித் தவிக்கின்றது தரை
முழுநேரமும் கோடை விடுமுறையில்
கமகமக்கும் நறுமணத்திலும்
சலசலக்கும் நீரின் அலம்பலிலும்
கலைந்து கிடந்த சமையலறை
கட்டித் தழுவ ஆளினின்றி
மெளனமாய்க் காத்திருக்கின்றது
வம்பிழுத்து இடிமுழக்கம் நடத்திய
குரல்களின் சொற்கள்
சுவற்றினுள் கரைந்து
தேங்கிக் கிடக்கின்றன நினைவுகளில்
காற்றும் வழிமறந்த
நிசப்த வீட்டில்
நீண்டு கொண்டேயிருக்கின்றது நேரம்
இப்பொழுது
வீடும் வீடல்ல.
-சுபா காரைக்குடி
No comments:
Post a Comment